இயக்குனர் சீனு ராமசாமியின்  இலக்கியப் படைப்புகளை  பாராட்டிய  இந்தியத் குடியரசு  துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

0
8

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் இருந்து வரப்பெற்ற அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதத்தையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநரும் சமகாலக் கவிஞருமான சீனு ராமசாமி தனது ஆழமான நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

துணைத் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தில், கலை, சமூகம் மற்றும் இலக்கிய உலகிற்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றிவரும் பன்முகப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அவரதுசில பூக்கள்கவிதையை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவர், எவ்விதப் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பாராமல், தங்களது நற்செயல்களால் நறுமணம் பரப்பி, அமைதியான தார்மீகக் குணத்துடனும் சுயநலமின்றியும் வாழும் மனிதர்களை இக்கவிதை மிக அழகாகக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மிக முக்கியமாக, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்திரைப்பட ரசனைக் கல்வியை (Film Appreciation Education) அறிமுகப்படுத்துவதற்கான இயக்குநர் சீனு ராமசாமியின் தேசிய அளவிலான முன்மொழிவையும் துணைத் குடியரசுத் தலைவர் கவனத்தில் கொண்டுள்ளார். இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள இளம் மாணவர்களிடையே காட்சி சார்ந்த அறிவு (Visual Literacy), பிறர் நிலை உணரும் பண்பு (Empathy) மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உன்னதமான தொலைநோக்குப் பார்வையாகும்.

 

இந்தப் பாராட்டு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில்: ‘’மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் அவர்களின் கனிவான வார்த்தைகளால் நான் ஆழ்ந்த நெகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். அவரைப் போன்ற உயர்ந்த ஆளுமை மிக்க ஒரு தலைவர், தனது பொன்னான நேரத்தைச் செலவிட்டு எனது கவிதைகளையும் புத்தகங்களையும் வாசித்துப் பாராட்டியிருப்பது ஒரு கலைஞனாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். ‘சில பூக்கள்கவிதையின் ஆழமான சாராம்சத்தை அவர் துல்லியமாகப் புரிந்து கொண்டு வாழ்த்தியிருப்பது எனது இதயத்தைத் தொட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திரைப்பட ரசனைக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் எனது முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டிருப்பது, இந்தியாவில் படைப்பாற்றல் மிக்கக் கல்வியின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது. அவருடைய வாழ்த்துகளையும் ஆசிகளையும் மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.

 

யதார்த்தமான தமிழ்த் திரைப்படங்களின் மிக முக்கியமான குரலாகவும், நவீன கவிதைகளின் வழி பேசும் இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது இலக்கியப் படைப்புகளைத் துணைத் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். அதனையேற்று இந்த உயரிய பாராட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் சீனு ராமசாமி ஏற்கனவே மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதியசினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார்.

 

இயக்குநர் சீனு ராமசாமி தொகுத்துள்ள உலகத்தரம் வாய்ந்த சிறார் திரைப்படங்களின் விவரங்களையும், நூலின் உன்னத நோக்கத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார். “இத்தகைய முயற்சி இந்த நாட்டுக்கு மிக முக்கியமானது; இதன் மூலம் நம் நாட்டு குழந்தைகளுக்கு மிகப்பெரிய நன்மையை நாம் செய்வோம்என்று பாராட்டிய அமைச்சர் அவர்கள், ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளும் பயனடையும் வகையில், இந்நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு சார்பில் செய்வதாக நெஞ்சார வாக்குறுதி அளித்து வாழ்த்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here