வடசென்னையை மையமாக வைத்து  உருவாகியுள்ள” ஆல் பாஸ் ” படத்தின்  படப்பிடிப்பு நிறைவு 

0
14

மைதீன் இயக்கத்தில் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை சொல்லும்ஆல் பாஸ்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இந்த படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ளார்.

 

நிறங்கள் மூன்று‘, ‘தருணம்‘, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகிலியோபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய  கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

 

பாண்டியநாடு‘, ‘எதிர்நீச்சல்போன்ற படங்களின் மூலம் பிரபலமான  சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.  ‘கலகத் தலைவன்‘, ‘அண்ணாதுரை‘ , ‘தகராறுபோன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்

 

சுப்ரமணியபுரம்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார். பசங்கபடத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன். பணியாற்றியுள்ளார். பிரபல நடன இயக்குநர் ராதிகா  நடனம் அமைத்துள்ளார்சண்டைக் காட்சிகளை  மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார். ஒப்பனைஎல்.வி.ராஜா, உடைகள்.எஸ்..வாசன், ஸ்டில்ஸ் அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்புகிப்சன் UGA, மக்கள் தொடர்புபுவன் செல்வராஜ், தயாரிப்பு மேற்பார்வைரஞ்சித்  தயாரிப்புமோகனா. ஆர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.

 

படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது, இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட்  கலந்த கதை கொண்டது. வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

 

வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால்  45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது’’ என்றார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here